×

கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான காதலன் காசியில் சடலமாக மீட்பு

குன்றத்தூர்: சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர் லோகநாயகி (35), இவருக்கு, திருமணமாகி கணவர் மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கிருஷ்ணகுமார் (37) என்பவருடன் லோகநாயகிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம்17ம்தேதி கட்டிலில் லோகநாயகி கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் கிடந்தார்.  இதுகுறித்து குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கள்ளக்காதலன் கிருஷ்ணகுமாரை வலைவீசி தேடி வந்தநிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேச மாநிலம், காசியில் உள்ள நதி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை காசி போலீசார் சோதனை செய்து பார்த்தபோது, அவரது பையில் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது தான், இறந்தது குன்றத்தூரில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோயம்புத்தூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், கிருஷ்ணகுமார் உடலை அடையாளம் காண அவரது உறவினர்கள் அங்கு சென்றுள்ளனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் குன்றத்தூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் காசியில் உள்ள நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குன்றத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான காதலன் காசியில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kashi ,Lokanayaki ,Mylapore, Chennai ,Krishnakumar ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...