×

ஆர்சிபி அணியின் அடுத்த போட்டியில் வில் ஜாக்ஸ் விளையாடுவார் என நம்புகிறேன்: ஆகாஷ் சோப்ரா

மும்பை: ஆர்சிபி அணியின் அடுத்த போட்டியில் வில் ஜாக்ஸ் விளையாடுவார் என நம்புகிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் 4 போட்டிகள் விளையாடி முடித்து விட்டன. மற்ற அணிகள் 3 போட்டிகளில் விளையாடி உள்ளன. கடந்த ஐபிஎல் தொடரை காட்டிலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகள் விளையாடியுள்ள மும்பை அணி இன்னும் வெற்றியை பதிவு செய்யாததால் கடைசி மற்றும் 10வது இடத்தில உள்ளது.

பெங்களூரு அணியை பொறுத்தவரை விராட் கோலி மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. டுபிளசிஸ், மேக்ஸ்வெல், கிரீன் போன்ற அதிரடி வீரர்கள் ரன்கள் எடுக்க திணறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் அடுத்த போட்டியில் வில் ஜாக்ஸ் விளையாடுவார் என நம்புகிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். “அடுத்த போட்டியில் வில் ஜாக்ஸ் விளையாடப் போகிறார் என்று உணர்கிறேன். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார், எனவே அவரை வெளியே வைக்கக்கூடாது. அவர் பேட்டிங் மற்றும் ஆஃப் ஸ்பின் பந்துவீசுகிறார். வில் ஜாக்ஸுக்கு எப்போது விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

The post ஆர்சிபி அணியின் அடுத்த போட்டியில் வில் ஜாக்ஸ் விளையாடுவார் என நம்புகிறேன்: ஆகாஷ் சோப்ரா appeared first on Dinakaran.

Tags : Will Jacks ,RCB ,Akash Chopra ,Mumbai ,IPL ,Bengaluru ,Delhi ,Dinakaran ,
× RELATED குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9...