×

ராஜஸ்தானில் பலாத்கார காயங்களை காட்டச்சொன்ன நீதிபதி மீது வழக்கு..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் பலாத்காரம் செய்யப்பட்டதால் உடலில் ஏற்பட்ட காயங்களை காட்டச் சொன்ன மாஜிஸ்திரேட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடைகளை கழற்றி காயங்களை காட்டுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மாஜிஸ்திரேட் கேட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஹிந்த்வான் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரவீந்திரகுமாரின் செயலால் பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி அடைந்தார். நீதிமன்றத்திலேயே காயங்களை காட்டச் சொன்ன மாஜிஸ்திரேட் மீது பெண் புகார் அளித்துள்ளார். மாஜிஸ்திரேட் ரவீந்திரகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மார்ச் 19-ல் 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

 

The post ராஜஸ்தானில் பலாத்கார காயங்களை காட்டச்சொன்ன நீதிபதி மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Hindwan Court ,Magistrate ,Ravindra Kumar ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...