×

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு

பெங்களூரு :கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. விஜயபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது சாத்விக் என்ற 2 வயது குழந்தை, மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி குழந்தையை மீட்டனர்.

The post ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka ,Lasayan ,Vijayapura district ,Satvik ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...