×

பாமக இல்லையேல் அதிமுகவின் ஆட்சியே கவிழ்ந்திருக்கும்: அன்புமணி பேச்சு

தருமபுரி: எடப்பாடி பழனிசாமி நம்மைப் பார்த்து துரோகி என்கிறார். யார் துரோகி என்பது உங்களுக்கே தெரியும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரை வழிநடத்திய அனைவருக்கும் துரோகம் செய்துதான் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். பாமகவின் தயவால் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். பாமக இல்லையேல் அதிமுகவின் ஆட்சியே கவிழ்ந்திருக்கும். கடந்த தேர்தலில் கொடுக்கும் தொகுதியை ஏற்றுக்கொண்டால் 10.5% இடஒதுக்கீடு கொடுப்பதாக கூறினர். எங்களுக்கு தொகுதிகளே வேண்டாம், இடஒதுக்கீடு கொடுங்கள். வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட்டு தருகிறோம் என ராமதாஸ் கூறினார் என கூறினார்.

The post பாமக இல்லையேல் அதிமுகவின் ஆட்சியே கவிழ்ந்திருக்கும்: அன்புமணி பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Bamaka ,Anbumani ,Dharmapuri ,Edappadi Palaniswami ,
× RELATED 2026ல் பாமக தலைமையில் ஆட்சியா? இந்த...