- கோவா
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- ராகுல் காந்தி
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- ராகுல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மக்களவைத் தேர்தல்
- பிரம்மந்தா
- கோவா செட்டிபாளையம்
- இந்தியா கூட்டணி
- தின மலர்
சென்னை: கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ஏப்.12-ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகிறார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
இது குறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி., அவர்களுடன் இணைந்து இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
2024 ஏப்ரல்-19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி., அவர்களுடன் இணைந்து வருகிற 12-04-2024 வெள்ளிக் கிழமை அன்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, செட்டிபாளையம் L&T பை-பாஸ் ரோடில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரச்சாரம்!! appeared first on Dinakaran.