×

நாங்கள் வாக்கு கேட்டு நிற்கவில்லை; வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேட்டு நிற்கிறோம் : சீமான்

சென்னை : நாட்டு மக்கள் நலன் காப்பதற்காக மட்டுமே நாம் தமிழர் கட்சி அரசியல் களத்தில் நிற்கிறது என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மத்திய சென்னை வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சீமான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர், நாங்கள் வாக்கு கேட்டு நிற்கவில்லை; வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேட்டு நிற்கிறோம் என்றும் மற்ற கட்சியினர் விலை கொடுத்து வாக்கை வாங்குகிறார்கள்: நாங்கள் நல்ல எண்ணங்களை விதைத்து வாக்கு பெறுகிறோம் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

The post நாங்கள் வாக்கு கேட்டு நிற்கவில்லை; வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேட்டு நிற்கிறோம் : சீமான் appeared first on Dinakaran.

Tags : Seeman ,CHENNAI ,Nataka ,Naam Tamil Party ,Seemana ,Chinthadirippet, Chennai ,Central ,Karthikeyan ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...