×

ஹைதராபாத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் உயிர்ச்சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த போது தொழிற்சாலைக்குள் 50 ஊழியர்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வெடிவிபத்தை அடுத்து வீடு முழுவதும் தீப்பிடித்தது. குறைந்தது 8 முதல் 10 பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் தொழிற்சாலை மேலாளர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வெடி விபத்து நடந்த உடனேயே, பல மாடி கட்டிடத்தில் தீப்பிடித்தது. அருகில் மற்றொரு இரசாயன தொழிற்சாலை உள்ளது. அதுவும் வெடித்தது. வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால், அப்பகுதியை காலி செய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பல மருத்துவமனைகளில் சேர்த்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

The post ஹைதராபாத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Telangana ,Sangareddy district ,Dinakaran ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து