×

தேர்தல் பறக்கும்படை சோதனையில் உரிய ஆவணமில்லாத ₹1.66 லட்சம் பறிமுதல்

பெரும்புதூர், ஏப்.4: பெரும்புதூர் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ₹1.66 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரும்புதூர் – குன்றத்தூர் சாலை குன்றத்தூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குன்றத்தூர் நோக்கி சென்ற காரை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்ததில், ₹1 லட்சத்து 66 ஆயிரத்து 500 இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை காரில் கொண்டு வந்த வீரமணியிடமிருந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை பறிமுதல் செய்து, பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவண கண்ணனிடம் ஒப்படைத்தனர். அப்போது, பணத்திற்கான உரிய ஆவணம் அளித்தபிறகு, பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தேர்தல் பறக்கும்படை சோதனையில் உரிய ஆவணமில்லாத ₹1.66 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Perumbudur ,-Kunrathur Road ,Election Flying Squad ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!