×

நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலி

முசிறி, ஏப்.4: முசிறி அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வேளக்காநத்தத்தை சேர்ந்தவர் பிச்சை (77). இவர் முசிறி புலிவலம் சாலையில் வேளக்காநத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த முதியவருக்கு முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்த முசிறி போலீசார் பிச்சையின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Musiri ,Pichai ,Velakanantha, Musiri district, Trichy district ,Velakanantham ,Musiri Pulivalam road ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி