×

₹1.57 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருவாரூர், ஏப். 4: திருவாரூர் எம்எல்ஏ தொகுதிக்கு உட்பட்ட திருநெய்பேர் என்ற இடத்தில் நேற்று நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்த ரமேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த நன்னிலம் ஆணைகுப்பம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 70 ரொக்கம் இருந்தது. இந்நிலையில் இதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த தொகையை பறிமுதல் செய்தனர். இதேபோல் புதுபத்தூர் என்ற இடத்தில் ரூ.55 ஆயிரத்து 390 தொகைக்கான உரிய ஆவணம் இல்லாததையடுத்து அதனையும் பறிமுதல் செய்த நிலையில் 2 பேர்களிடமிருந்தும் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 460 பறிமுதல் செய்யப்பட்டு திருவாரூர் உதவி தேர்தல நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post ₹1.57 லட்சம் ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Ramesh ,Permanent Surveillance Team ,Tiruneiber ,MLA ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...