×

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக போலீசார், துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

தோகைமலை, ஏப். 4: தோகைமலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து போலீசார் மற்றும் துணை ராணுவ படையின் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது. இந்தியாவில் 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து இந்தியாவில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன தணிக்கை பணிகளுக்காக மத்திய துணை ராணுவ படைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோல் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்த பணிகளுக்கு இந்திய துணை ராணுவ படைகளை கூடுதலாக வரவழைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளை உறுதிபடுத்தும் விதமாக நேற்று தோகைமலையில் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையின் அணிவகுப்பு பேரணி நடந்தது. தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமை ஏற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணி வகுப்பானது திருச்சி மெயின் ரோடு, தோகைமலை கருப்பகோவில் தெரு, கடைவீதி, வாரச்சந்தை, மணப்பாறை குளித்தலை மெயின்ரோடு வழியாக மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்று முடிவடைந்தது. இந்த அணி வகுப்பில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ பாலசுப்ரமணி உள்பட துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக போலீசார், துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : flag ,Thokaimalai ,2024 parliamentary elections ,Tokaimalai ,India ,
× RELATED போலீஸ் கொடி அணிவகுப்பு