×

திருவாடானை அருகே இரவு பகலாக வாகன சோதனை

திருவாடானை, ஏப்.4: நாடாளுமன்றத் தேர்த ல்நடைபெற உள்ள நிலையில் திருவாடானை அருகே கருமொழி சோதனை சாவடியில் தீவிரமாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது. திருவாடானை அருகே சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களின் எல்லை சந்திப்பு பகுதியான கருமொழி கிராமத்தில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் நிலை கண்காணிப்பு குழு தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பறக்கும் படை அலுவலர் அருள் டேவிட் தலைமையில் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடதுகின்றனர். இந்த சோதனை 3 ஷிப்டுகளாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

The post திருவாடானை அருகே இரவு பகலாக வாகன சோதனை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Karumozhi ,Sivagangai ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை