×

ஆயுதங்களுடன் இருவர் கைது

மதுரை, ஏப். 4: மதுரையில், போலீசார் நடத்திய ரோந்து பணியின்போது, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை, அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் வண்டியூர், சங்கு நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும், தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர் வண்டியூர், தீர்த்தக்காடைச் சேர்ந்த மாரிமுத்து எனவும், அவர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், கே. புதூர் போலீசார் காந்திபுரம் கண்மாய்க்கரை அருகே வாளுடன் சுற்றித்திரிந்த, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆயுதங்களுடன் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Annanagar ,station ,Sangu Nagar, Vandiyur ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...