×

மேட்டுப்பாளையத்தில் ரூ.1.18 லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையம்,ஏப்.4:மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.அதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில் சிறுமுகை ஆலங்கொம்பு கோழிப் பண்ணை பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(36) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.18 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

The post மேட்டுப்பாளையத்தில் ரூ.1.18 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Tamil Nadu ,Lok Sabha ,Election Commission ,
× RELATED நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து...