×

மேட்டுப்பாளையம் – நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் மே 27ம் தேதி வரை நீட்டிப்பு தென்னக ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம்,ஏப்.4:மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்களன்று காலை மேட்டுப்பாளையம் வந்தடையும்.மீண்டும் இந்த ரயில் திங்களன்று இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாயன்று திருநெல்வேலியை சென்றடையும். இந்நிலையில் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் நேற்று முன்தினம் வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ரயிலின் சேவை மீண்டும் வரும் மே 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

இந்த ரயிலானது ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம்,கீழக்கடையம்,பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி,விருதுநகர், மதுரை,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர்,கோவை சந்திப்பு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட உள்ளது.

The post மேட்டுப்பாளையம் – நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் மே 27ம் தேதி வரை நீட்டிப்பு தென்னக ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Nellai ,Southern Railway ,Tirunelveli ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...