×

ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என வாய் கூசாமல் புளுகும் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் என வாய் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பாஜவின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில நாளேடு. பாஜவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பாஜ ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?. ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது. மோடியின் குடும்பம் என்பது ‘ஈ.டி, ஐ.டி. சிபிஐ தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என வாய் கூசாமல் புளுகும் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M.K.Stalin ,BJP ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...