×

2023-24 நிதியாண்டில் தெற்கு ரயில்வே வருமானம் ₹12020 கோடி: முந்தைய நிதியாண்டை விட 10% அதிகரிப்பு

சென்னை: தெற்கு ரயில்வேயின் ஆண்டு வருமானம் 2023-24ம் நிதியாண்டில் ரூ. 12020 கோடி ஆகும். இது முந்தைய நிதியாண்டை விட கிட்டத்தட்ட 10% அதிகம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
2023-24ம் நிதியாண்டில், தெற்கு ரயில்வே அனைத்து பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆண்டு மொத்த வருவாய் என்பது ரூ.7151 கோடி பயணிகள் கட்டண வருவாய், ரூ.3674 கோடி சரக்கு கட்டண வருவாய் மற்றும் இதர வருவாய் உள்பட தெற்கு ரயில்வேயின் ஆண்டு மொத்த வருவாய் 2023-24 நிதியாண்டில் 12020 கோடி ரூபாய். இது முந்தைய நிதியாண்டை விட கிட்டத்தட்ட 10% அதிகரிப்புடன் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

2023-24ம் ஆண்டில் சென்னை-கோவை- சென்னை, நெல்லை-சென்னை- நெல்லை, விஜயவாடா- சென்னை- விஜயவாடா, கோவை- பெங்களூரு கான்ட்- கோவை, திருவனந்தபுரம்- ஆகிய 8 புதிய ஜோடி வந்தே பாரத் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. காசர்கோடு- திருவனந்தபுரம் (கோட்டயம் வழியாக), திருவனந்தபுரம்-காசர்கோடு- திருவனந்தபுரம் (ஆலப்புழா வழியாக), மங்களூரு-மட்கான்- மங்களூரு, மற்றும் சென்னை-மைசூர்- சென்னை, திருவனந்தபுரம் – காசர்கோடு (ஆலப்புழா வழியாக) வந்தே பாரத் சேவைகள் – மங்களூரு சென்ட்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் சேவைகள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் வேகத்தை மேம்படுத்தும் திட்டங்களில் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன், தெற்கு ரயில்வே அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 145 வழித்தடத்தில் 130 கிமீ வேகத்தில் பிரிவு வேகத்தை அதிகரித்துள்ளது. 1272 பாதை கிமீ தொலைவில் உள்ள நெட்வொர்க் பிரிவு வேகம் மணிக்கு 110 கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் 75 நிரந்தர வேகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சுமார் 170 எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில்கள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் குறைந்த நேரத்தில் விரைவாக செல்ல வசதியாக உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், 42 பயணத்திட்டங்கள் பல்வேறு பதிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களால் இயக்கப்பட்டு, தெற்கு ரயில்வேக்கு ரூ.34 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அற்புதமான வரலாற்று இடங்களை இந்தியா மற்றும் உலக மக்களுக்கு காட்சிப்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் பாரத் கௌரவ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம், ரயில் நிலையங்களில் ஒட்டுமொத்த ரயில்வே உள்கட்டமைப்பு, வசதிகள் மற்றும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும். இதன்படி மொத்தம் 116 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 75 நிலையங்கள், கேரளாவில் 35 நிலையங்கள், புதுச்சேரியில் 3 நிலையங்கள், கர்நாடகாவில் 2 நிலையங்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நிலையம் தெற்கு ரயில்வேயின் அதிகார வரம்பில் அடங்கும். 2023-24ம் ஆண்டில் இது தொடர்பான பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அடிப்படையில், 2023-24ம் ஆண்டில், மிளவட்டான் – தூத்துக்குடி (7.7 கி.மீ.), நெல்லை – மேலப்பாளையம் – (3.60 கி.மீ.), ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் இணைப்பு (12.87 கி.மீ.) பிரிவுகளின் இரட்டிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மிஷன் 100% மின்மயமாக்கலை நோக்கி முன்னேறி, 2023-24ல் மொத்தம் 191 கிமீ பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதில் ஷோரனூர்-நிலம்பூர் (66 கிமீ), பகவதிபுரம்-எடமன் (33 கிமீ), மதுரை – போடிநாயக்கனூர் (90 கிமீ) மற்றும் மங்களூரு-பாடில் (2 கிமீ) ஆகிய மின்மயமாக்கல் திட்டங்கள் அடங்கும்.இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 2023-24 நிதியாண்டில் தெற்கு ரயில்வே வருமானம் ₹12020 கோடி: முந்தைய நிதியாண்டை விட 10% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...