×

வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யபட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிட்டுள்ள அறிக்கையில்:
05/04/2024 (வெள்ளிக் கிழமை) 06/04/2024 (சனிக்கிழமை) மற்றும் 07/04/2024 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்னர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 05/04/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 265 பேருந்துகளும். 06/04/2024 (சனிக்கிழn) 350 பேருந்துகளும் சென்னை கோம்பேட்டிலிருத்து நாகை வேளாங்கண்ணி. ஓருர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 08/04/2024 வெள்ளி அன்று 66 பேருத்துகளும் மற்றும் 06/04/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 05/04/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 285 பேருந்துகளும், 08/04/2024 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து 05/04/2024 அன்று 55 பேருந்துகளும் 06/04/2024 அன்று 55 பேருத்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6955 பயணிகளும் சனிக்கிழமை 3784 பணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 4310 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.insica மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Submukurtha day ,Tamil Nadu Transport Corporation ,TMC ,Chennai ,Dinakaran ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு