×

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை-நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மார்ச் மாதம் வரை வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. எழும்பூரில் ஏப்.4 முதல் ஏப்.25 வரை வியாழக்கிழமைகளில் காலை 5.15க்கு புறப்பட்டு மதியம் 02.10க்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-மணிக்கு எழும்பூர் சென்று சேரும்.

The post சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vande Bharat Special Train ,Railway ,Southern Railway ,Vande Bharat ,Chennai- ,Nagarko ,Bharat ,Jalampur ,Vande Bharat Special Train Service ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...