×

கோயில்களுக்கு தானமாக வழங்கிய பசுக்களில், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கோயில்களுக்கு தானமாக வழங்கிய பசுக்களில், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. கோயில்களுக்கு தானமாக வழங்கிய பசுக்களை தனிநபர்களுக்கு வழங்க தடைகோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பசுக்கள் அடிமாடுகளாக விற்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுதாரர் குற்றம்சாட்டினார். பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அர்ச்சகர்கள், சுய உதவி குழுக்கள், கோ சாலைகளுக்கு வழங்கப்படுகிறது என்று அரசு தெரிவித்தது. தானமாக பெற்ற பசுக்களை கோயில்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

The post கோயில்களுக்கு தானமாக வழங்கிய பசுக்களில், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டது குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Rangarajan Narasimhan ,
× RELATED பொதுநல வழக்கு: ரங்கராஜன் நரசிம்மன்...