×

கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: அழிந்து வரும் கழுகுகளை பாதுகாக்க தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கழுகு பாதுகாப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில் ஜூன் 5-க்குள் பதில்மனு தாக்கல் செய்யாவிடில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. 1980-ல் இந்தியாவில் 4 கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : ICourt ,Union and State Governments ,Chennai ,Madras High Court ,Eagle Conservation Centers ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...