×

சீர்காழி அருகே மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம்..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் ரேஷன் கடை, தூண்டில் வளைவு, மீன் ஏல கூடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தர கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கோரிக்கைகளை வலியுறுத்தி தெருக்களில் கருப்புக் கொடி கட்டி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சீர்காழி அருகே மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai ,Mayiladuthurai district ,Keezamoovarkarai ,
× RELATED செம்மங்குடி ஊராட்சிக்கு சீரான குடிநீர்