×

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு: ஒரு சவரன் ரூ.52,000க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,500-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.84 க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது . இந்த நிலையில் 28ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது.

29ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை அதிகப்பட்ச விலை என்ற உச்சத்தை தொட்டது.

ஆனால் 30ம் தேதி தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை பெயரளவுக்கு கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.50,960க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,500-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.84 க்கு விற்பனையாகிறது.

இந்த ஜெட் வேக விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இப்படியே தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தொட்டு விடுமோ? என்ற ஏக்கமும் நகை வாங்குவோர் இடையே நிலவி வருகிறது.

The post ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு: ஒரு சவரன் ரூ.52,000க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…