×

மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் பதற்றம்: தனியார் பள்ளிக்கு விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் அருகே இருந்த பன்றியை சிறுத்தை கொன்றது. மயிலாடுதுறையில் நேற்றிரவு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பட்டு வருகிறது. சிறுத்தை குறித்து தகவல் அறிந்தால் 9626709017 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு வனத்துறை அறிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட செம்மங்கரை அருகே உள்ள தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மங்கரை அருகே உள்ள பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தினார்.

 

The post மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் பதற்றம்: தனியார் பள்ளிக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Leopard ,Chemmangulam ,Mayiladuthura ,School ,Semmangkulam ,Chemmangkulam ,Mayiladudhara ,Holiday ,Private School ,
× RELATED மேல்குந்தா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்