×

பரமக்குடி பகுதியில் ஓபிஎஸ் தீவிர தேர்தல் பிரசாரம்

பரமக்குடி,ஏப்.3: பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலூர், முகமதியாபுரம், சத்திரக்குடி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பலாப்பழம் சின்னத்தை பெறுவதற்கு எந்த அளவிற்கு போராடினேன் என்பது உங்களுக்கு தெரியும்.

நான் ஒருவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்பு மனு செய்தேன். தோட்ட வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்களை கூட்டி வந்து நான் கேட்கும் சின்னங்களை அவர்களும் கேட்டனர். பொதுமக்களின் நல்லெண்ணம், ஆசீர்வாதத்தால் எனக்கு பலாப்பழம் சின்னம் விழுந்தது. அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டி இப்பகுதி மக்களை நான் நாடி வந்திருக்கிறேன்.

வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடக் கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ராமநாதபுரம் ஒரு புண்ணிய பூமி, இந்த புண்ணிய பூமியில் வாழ்வது பெரும் பாக்கியம். வரலாற்று பெருமைமிக்க இந்த தொகுதியில் உங்களில் ஒருவராக போட்டியிடுகிறேன். உங்களின் பொன்னான வாக்குகளை நமது வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என பேசினார்.

The post பரமக்குடி பகுதியில் ஓபிஎஸ் தீவிர தேர்தல் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : OPS ,Paramakkudy ,Paramakudi ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Ramanathapuram Lok Sabha ,BJP ,Mudalur ,Mohamadiyapuram ,Chatrakkudi ,Manjoor ,Paramakkudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்