×

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை: மனைவி கோபித்து சென்றதால் விரக்தி

 

போடி, ஏப்.3: போடியில் குடி பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குடியிருப்பவர் ராஜேஷ் கண்ணன் (32). இவர் சின்னமனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுபாஷினி.

ராஜேஷ் கண்ணன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுச் செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். இதனை மனைவி பலமுறை கண்டித்தார். ஆனால் ராஜேஷ் கண்ணன் மாறவில்லை. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த ராஜேஷ் கண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த தாயார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரில் சுபாஷினி நகர் போலீஸ் நிலை எஸ்ஐ அசோக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை: மனைவி கோபித்து சென்றதால் விரக்தி appeared first on Dinakaran.

Tags : Bodi ,Rajesh Kannan ,Bodi Railway Station Road ,Chinnamanur ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்