×

திருவாடானை பகுதிகளில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

திருவாடானை, ஏப்.3: மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவாடானை பகுதிகளில் வீடு வீடாக பூத்சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

பொதுவாக தேர்தல் நடைபெறும் நாட்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக மட்டுமே இந்த பணி துவங்கி நடைபெறும். ஆனால் இப்போது வாக்குப்பதிவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே இந்த பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வினியோகம் நடைபெற்று வருகிறது. மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் இப்பணிகளை முடித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post திருவாடானை பகுதிகளில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadan ,Thiruvadanai ,Lok Sabha elections ,Bhutchilip ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு