×

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

 

ஈரோடு, ஏப்.3: சேலம் மாவட்டம், வீரபாண்டி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ. பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Railway Police ,Veerapandi ,Makudanjavadi ,Salem district ,S.I. ,Prasanna ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...