×

20 ஆயிரம் புக் படிச்சவரு மேதாவி கச்சத்தீவை படிக்கலையா?

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு பிரச்னை பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும்? ஆர்டிஐல வாங்கி பேசுகிறேன் என்கிறார். எல்லாம் தெரிந்தவன் என்ற மெத்தப் படித்த மேதாவியாக பேசுகிறார். 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தவன் என்கிறார். கச்சத்தீவு பற்றி எப்படி அவர் படிக்கலை? மத்தியில் ஆட்சியில் இருக்கிற நீங்கள், எத்தனையோ விஷயங்களை உளவுத்துறை மூலம் எடுக்கலாம்.

வாய்ஸ் மெயிலில் மறைமுகமாக பேசுவதை எடுக்க முடிகிற அண்ணாமலைக்கு, மீனவர்களை பாதிக்கும் மோசமான கச்சத்தீவு பிரச்னை தொடர்பாக, ஏன் பிரதமர் மோடியிடம் பேசி நடவடிக்கை எடுத்திருக்க முடியாது? புதிதாக இதைப் பேசி, மீனவர் சமுதாய வாக்குகளை பெற இதுமாதிரி நாடகம் நடத்துகிறார். அவர் மகா பெரிய பொய்யர்.

லோக்கல் வண்டி டெல்லி போய் சேராது என்று எங்களை அண்ணாமலை பேசி இருக்கிறார். எந்த வண்டி டெல்லிக்குப் போகும்; எந்த வண்டி போகாது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அண்ணாமலை சொன்னால் பாஜவிற்கு ஓட்டு விழுமா? நடக்கக் கூடிய காரியமா இது? அண்ணாமலை பேசலாமா? ஆட்சி அதிகாரம் இருப்பதால் இந்தமாதிரி தைரியமாக இப்படி பேசி வருகிறார். அண்ணாமலை என்ன ஞானியா? இவ்வாறு பேசினார்.

The post 20 ஆயிரம் புக் படிச்சவரு மேதாவி கச்சத்தீவை படிக்கலையா? appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Sellur Raju ,Madurai ,Annamalai ,
× RELATED உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு...