×

டி.களத்தூர் அரசு பள்ளியில் வெற்றிலை, பாக்கு வைத்து பள்ளி மாணவர் சேர்க்கை

பாடாலூர், ஏப் 3: அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து, மாணவர் சேர்க்கை நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இப்பள்ளி தலைமையாசிரியர் சரோஜாதேவி தலைமையிலான ஆசிரியர்கள், வெற்றிலை, பாக்கு தாம்பூலத்தட்டில், பள்ளியின் சிறப்புகள் குறித்த துண்டு பிரசுரத்தை வைத்து, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்த நூதன அணுகுமுறை, பெற்றோர் மட்டுமின்றி மாணவர்களிடமும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பள்ளி ஆசிரியர் ராதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி கார்த்திகா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது’ என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

The post டி.களத்தூர் அரசு பள்ளியில் வெற்றிலை, பாக்கு வைத்து பள்ளி மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : D. Kalathur Govt. School ,Badalur ,Perambalur district ,Aladhur taluk ,T. Kalathur Government Adi Dravidar Health Primary School ,D. Kalathur Government School ,Dinakaran ,
× RELATED டி.களத்தூரில் குட்டையில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி சாவு