×

கிருஷ்ணராயபுரம் அருகே வாகன சோதனையில் ₹4.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் நிலைய கண்காணிப்பு குழு அதிரடி

கிருஷ்ணராயபுரம், ஏப். 3: கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சுங்கச்சாவடி பகுதியில் நிலைய கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ₹4,25,000 பறிமுதல் செய்தனர். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சங்கர் சாவடி பகுதியில் கிருஷ்ணராயபுரம் (தனி ) சட்டமன்ற தொகுதி நிலையான கண்காணிப்பு அலுவலர் அன்புமணி, தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, காரைக்குறிச்சி, சிவன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ₹4,25,000/- ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த நிலைய கண்காணிப்பு அலுவலர். அன்புமணி, கிருஷ்ணராயபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தாசில்தாரருமான மகேந்திரன் வசம் ஒப்படைத்தனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே வாகன சோதனையில் ₹4.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் நிலைய கண்காணிப்பு குழு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Station Vigilance Team ,Manavasi ,Shankar ,Karur Parliamentary Constituency ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...