×

குளித்தலை அருகே மொபட்டிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

குளித்தலை, ஏப். 3: குளித்தலை அருகே மொபட்டிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார். குளித்தலை அடுத்த நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் கீழ் நந்தவன காடு பகுதியை சேர்ந்தவர் தர்மா (52). டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தை அன்று இவர் தனது மொபட்டில் நெய்தலூர் டு நச்சலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளித்தலை அருகே மொபட்டிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kuluthalai ,Kulithalai ,Dharma ,Nandavana ,Nachalur ,Nangavaram ,Kulithala ,Kuluthlai ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு