×

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மர்மச்சாவு

பரமத்திவேலூர், ஏப்.3: நாமக்கள் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்த இளநகர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள தண்ணீர் ேடங்க் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார். அதனைக்கண்டு அப்பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று காலை அந்த நபர் உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இளநகர் கிராம நிர்வாக அலுவலர் பழனியப்பன்(59) புகார் தெரிவித்தார்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவாறு அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. அவரை கடந்த 31ம் தேதி, இளநகர் பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியது தெரிய வந்தது. இதுதொடர்பாக 18வயது பாலிடெக்னிக் மாணவன், கட்டிட தொழிலாளியான விவேக், மளிகை கடை தொழிலாளி வைத்தீஸ்வரன், கூலி தொழிலாளி திருமலை, கார் டிரைவர் குமரேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,Ilanagar panchayat ,Velakaundampatti ,Namakkal district ,Arunkumar ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்