×

அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்

பள்ளிபாளையம், ஏப்.3: பள்ளிபாளையம் கண்டிப்புதூரில் 5ம் வகுப்பு வரை செயல்படும் அரசு பள்ளியில், 350 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ.கருவி, கடந்த ஒருவருடமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும், ஜெராக்ஸ் இயந்திரம் இல்லாததால் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவரும், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில இளைஞரணி அமைப்பாளருமான ஆதவன், உதவி செய்ய முன்வந்தார்.

தான் படித்த பள்ளியிலேயே, தனது மகன் சொல்லின் செல்வனையும் சேர்த்துள்ள அவர், பள்ளிக்கான ஆர்ஓ இயந்திரத்தை பழுதுபார்த்தும், ₹22 ஆயிரம் மதிப்பிலான புதிய ஜெராக்ஸ் இயந்திரத்தை வாங்கி பள்ளிக்கு வழங்கினார். இதற்கான பாராட்டு விழா கூட்டம் பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயகுமார், மேலாண்மைக்கு குழு நிர்வாகி மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனர்.

The post அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Pallipalayam Kandiputur ,Dinakaran ,
× RELATED ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில்...