×

மாட்டுவண்டியில் மணல் கடத்திய இருவர் கைது

சாத்தான்குளம், ஏப்.3: சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ. நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது செம்மண்குடியிருப்பு பகுதியில் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் செம்மண்குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்த வேதக்கண் மகன் கோசல்ராம் (47), வடக்குத் தெருவை சேர்ந்த சாமி மகன் சுயம்புத்துரை (58) என்பதும், சட்டவிரோதமாக அதே பகுதியில் உள்ள ஓடையில் ஆற்று மணலை அள்ளி கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் இருவரை கைதுசெய்தனர். மேலும் அரை யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

The post மாட்டுவண்டியில் மணல் கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Satankulam, Baikulam ,S.I. Nagaraj ,Semmangudiripu ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்