×

விஜயநாராயணம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது

நெல்லை, ஏப். 3: விஜயநாராயணம் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். விஜயநாராயணம் அருகேயுள்ள ஏழாங்கால் மேற்கு தெருவை சேர்ந்த பேச்சி காந்தி(42). இவரது மனைவி இசக்கியம்மாள் (37). கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி இசக்கியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேச்சிகாந்தி மனைவியை அவதூறாக பேசி தாக்கினார். இதனை தடுக்க வந்த பேச்சிகாந்தியின் தந்தை வெள்ளச்சாமியையும் (80) கல்லால் தாக்கினார். இதுகுறித்து இசக்கியம்மாள், விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்ஐ விஜயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பேச்சிகாந்தியை கைது செய்தனர்.

The post விஜயநாராயணம் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vijayanarayan ,Nellie ,Pachi Gandhi ,Eshankal West Street ,Ishakiyammal ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...