×

மானூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது

மானூர், ஏப்.3: மானூர் அருகே மனைவியை தாக்கி கணவனை போலீசார் கைது செய்தனர். மானூர் அருகேயுள்ள தெற்குபட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை(38). இவரது மனைவி சுடலி(35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளன. சின்னத்துரை அடிக்கடி தகராறு செய்து வந்ததால் சுடலி, அதே ஊரிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரை அங்கு சென்று மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து மானூர் காவல் நிலையத்தில் சுடலி கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ கணேசன் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தார்.

The post மானூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Manoor ,Chinnathurai ,South Patti ,Manur ,Sudali ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது