×

காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்

வானூர், ஏப். 3: வானூர் தாலுகா ஆரோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நசீர்தீன் தலைமையில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குயிலாப்பாளையம் மற்றும் பொம்மையார்பாளையம் சாலையில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில் அதில் 180 மி.லி அளவுள்ள 180 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில், காரில் மதுபாட்டில்கள் கடத்தியது திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (27), அரிக்குமார்(47) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் உறவினர் திருமண விழாவிற்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்களை கைது செய்து மதுபாட்டில்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

The post காரில் மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vanur ,Naseerdeen ,Vanur taluk Aurovil ,Quilapalayam ,Pomiyarpalayam road ,Dinakaran ,
× RELATED வரம் தரும் அம்பிகையர்