×

உரிய ஆவணமில்லாத ரூ.2.87 லட்சம் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் பகுதியில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தின் கீழ், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த காரை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்ததில், ரூ.2.87 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. பணத்தை கொண்டு வந்த மாங்காடு பகுதியை சேர்ந்த டேனியல் ஜெயராஜ் என்பவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்து கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post உரிய ஆவணமில்லாத ரூ.2.87 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Election Flying Squad ,Vandalur-Meenjoor ,Kunradthur ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!