×

மாமல்லபுரம் அருகே பரபரப்பு மாந்தோப்பில் திடீர் தீ: போலீசார் விசாரணை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே மாந்தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி மேட்டுத் தெருவில், சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த, மாந்தோப்பில் நேற்று மாலை திடீரென மாமரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து, தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், சிறுசேரி முதன்மை தீயணைப்பாளர் ரமேஷ் பாபு மற்றும் வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால், அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அங்குள்ள புல்வெளி மற்றும் செடி, கொடிகள் எரிந்து நாசமானது. மாந்தோப்பில் மர்ம நபர்கள் யாரேனும் மரங்களுக்கு தீ வைத்தனரா அல்லது வெயிலின் தாக்கத்தால் தீப்பிடித்து எரிந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாந்தோப்பு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post மாமல்லபுரம் அருகே பரபரப்பு மாந்தோப்பில் திடீர் தீ: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Mantop ,Pooncheri Mettu Street ,Chennai ,Manthop ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்