×

திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கு காவல் நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டும் : சு.வெங்கடேசன்

மதுரை : திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கு காவல்நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில்,”தேர்தல் காலம் என்பதால் திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப, சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடைப்பதில் பெரும் அலைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது.தேர்தலுக்கான சுவிதா செயலியில் இதற்கான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆகவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டுகிறேன்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கு காவல் நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டும் : சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,Madurai ,
× RELATED அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை...