×

பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் அருகே பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பீஜப்பூர் அருகே லெண்ட்ரா கிராமத்தின் வனப்பகுதியில் காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது.

இதனால், கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெந்த்ரா கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 9 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் துப்பாக்கி, ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்டர்களில் இந்த ஆண்டு இதுவரை 41 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 9 பேர் சுட்டுக்கொலை! appeared first on Dinakaran.

Tags : Nuccellites ,Chhattisgarh ,Bijapur ,Lendra ,Dinakaran ,
× RELATED சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர்...