×

சட்டீஸ்கரில் இன்று காலை 4 நக்சல்கள் சுட்டுக் கொலை

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் 4 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதுங்கியிருக்கும் மற்ற நக்சல் கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல் கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 4 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து அந்த நக்சலைட்டின் உடலும் ஆயுதமும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் பதுங்கியிருக்கும் மற்ற நக்சல் கும்பலை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்துடன், பீஜப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில், பாதுகாப்புப் படையினர் இந்த ஆண்டு நடத்திய என்கவுன்டரில் இதுவரை 34 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post சட்டீஸ்கரில் இன்று காலை 4 நக்சல்கள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : naxals ,Chhattisgarh ,Bijapur ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் நக்சல் சுட்டு கொலை