×

போதைப்பொருள் வழக்கு: தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜர்

டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக இயக்குநர் அமீர் நேரில் ஆஜரானார். டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சூடோபெட்ரைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சூடோபெட்ரைன் கடத்தல் தொடர்பாக 3பேர் கைதான நிலையில் அவர்கள் அளித்த தகவலில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளியான சதாவையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்ததையடுத்து, தற்போது அடுத்தகட்டமாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தங்களது நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். குறிப்பாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பரும், தொழில் பார்ட்னரான இயக்குனர் அமீருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர். அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்ததால் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இயக்குநர் அமீர் மற்றும் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக இயக்குநர் அமீர் நேரில் ஆஜரானார். டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜராகியுள்ளார். ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து அமீரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் கடத்தியதாக கைதான ஜாபர் சாதிக் தொடர்பாக விளக்கம் அளிக்கிறார். ஜாபர் சாதிக்கிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தும் நிலையில் அமீர் ஆஜராகியுள்ளார்.

The post போதைப்பொருள் வழக்கு: தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Amir ,National Narcotics Control Unit ,Delhi ,Aamir ,Dinakaran ,
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது