×

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள 2 இடங்களில் நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

டோக்கியோ: ஜப்பானில் 2 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது. ஜப்பானில் 2 இடங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

The post ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள 2 இடங்களில் நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : 2 places ,north of Japan ,Tokyo ,Japan ,Afghanistan ,Dinakaran ,
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்