×

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

திண்டுக்கல், ஏப்.2: திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் கவின்குமார் (25). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு பள்ளி செல்லும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கவின்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சரண் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் கவின்குமாருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

The post போக்சோ வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Gavin Kumar ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...