×

போதை புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல்

திருவாடானை, ஏப்.2: திருவாடானை அருகே போதை புகையிலை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருவாடானை அருகே சி.கே.மங்கலத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்துபவர் சதீஷ். இவரது கடையில் போதை புகையிலை வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி ஆகியோர் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் அங்கு போதை புகையிலை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைக்கு சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று மங்கல குடியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் சேக்தாவூத். இவரது கடையில் சோதனை செய்தபோது அங்கும் போதை புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post போதை புகையிலை விற்ற 2 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Satish ,CK ,Mangalam ,Thiruvadan ,Dinakaran ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்