×

கரூர் உணவுக்காக சாகச காட்சிகள் தோகைமலை அருகே நிலப்பிரச்னை தகராறில் 4 பேர் மீது வழக்கு, பெண் ைது

தோகைமலை, ஏப்.2: கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகம் ஆர்டிமலை ஊராட்சி மேலவாளியம்பட்டி ரெங்காநயக்கர் மகன் கோபால் (47). இதே பகுதியை சேர்ந்த தாதாநாயக்கர் மகன் வெங்கடாசலம் (29). இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே நிலப்பிரச்னை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி தாதாநாயக்கர் வீட்டின் முன்பாக கோபால் தனது தம்பியான தங்கவேலுவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பேது அங்கு வந்த வெங்கடாசலம், சின்னப்பொண்ணு ஆகியோர் நிலப்பிரச்சனை சம்மந்தமாக மீண்டும் பிரச்சனை செய்து உள்ளனர். இதில் கோபால், தங்கவேல் மற்றும் வெங்கடாசலம், சின்னப்பொண்ணு ஆகிய 4 பேரும் ஒருவருக்கு ஒருவர் பிரச்சனை செய்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து தாக்கிக்கொண்டனர். இதில் காயம் அடைந்த கோபால் திருச்சி அரசு மருத்துவமனையிலும், வெங்கடாசலம் குளித்தலை அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து கோபால் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் தோகைமலை காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் கோபால், தங்கவேல் மற்றும் வெங்கடாசலம், சின்னப்பொண்ணு ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார் சின்னப்பொண்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கரூர் உணவுக்காக சாகச காட்சிகள் தோகைமலை அருகே நிலப்பிரச்னை தகராறில் 4 பேர் மீது வழக்கு, பெண் ைது appeared first on Dinakaran.

Tags : Karur ,Tokaimalai ,Thokaimalai ,Gopal ,Renganayakar ,Karur district ,Ardimalai ,panchayat ,Melavaliambatti ,Dadhanayak ,Venkatachalam ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்