×

செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர்,‘‘ சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நீண்ட மாதங்களாக சிறையில் இருப்பதை அடிப்படையாக கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதேப்போன்று மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் இருக்கும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் மேலும் இந்த வழக்கை அமலாக்கத்துறை தரப்பில் விசாரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள்,‘‘கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறி இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

The post செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Senthil Balaji ,Supreme Court ,New Delhi ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...